Monday, June 18, 2018

சேலம் to சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் அவசியமா? முழுமையான தகவல் மற்றும் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? ....



தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னைக்கு அடுத்தபடியாக தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம்.  







இந்தத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருகிறார்கள். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்தின் வழியாக  இச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த புதிய பசுமை நெடுஞ்சாலை பற்றியத் தகவல்களை காணலாம்.



ரூ.10,000 கோடி


  • ரூ.10,000 கோடி செலவில் இந்த புதிய பசுமை நெடுஞ்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவங்குமாறு தமிழக அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறது.


274 கிமீ தொலைவு


  • இந்த நெடுஞ்சாலை 274 கிமீ தொலைவு கொண்டதாக அமைக்கப்பட இருக்கிறது. இதில், 250 கிமீ தூரமானது வனப்பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது.


  • சென்னை தாம்பரத்தில் துவங்கி தர்மபுரி மாவட்டம் அரூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையானது 179B எனவும், அரூர் முதல் சேலம் வரையில் அமைக்கப்பட இருக்கும் புதிய நெடுஞ்சாலை 179A என்ற பெயரிலும் குறிப்பிடப்படும்.



  • இந்த சாலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிமீ தொலைவிற்கும் அமைக்கப்பட உள்ளது.

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ தூரம் தொட்டுச் செல்லும் இந்த சாலை மீண்டும் தர்மபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 53 கிமீ தொலைவுக்கு அமைய இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியிலிருந்து சேலம் மாநகரம் வரை 38 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட இருக்கிறது.


  • தற்போது சென்னையிலிருந்து உளூந்தூர்பேட்டை வழியாக சேலம் வரையில் 360 கிமீ தொலைவுக்கான நெடுஞ்சாலை பயன்பாட்டில் இருக்கிறது. புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களுக்கு இடையிலான தொலைவு 60 கிமீ வரை குறையும்.

 3 மணிநேர பயணம்


  • சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சேலத்திற்கான சாலையானது, இரு நகரங்களையும் 6 மணிநேரத்தில் இணைக்கிறது. ஆனால், புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களையும் வெறும் 3 மணிநேரத்தில் இணைக்க முடியும்.

  • தற்போதுள்ள பயண நேரத்தைவிட இது பாதியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாகனங்களின் எரிபொருள் சிக்கனமும் வெகுவாக மேம்படும் வாய்ப்பு கிடைக்கும்.

  • இந்த சாலையில் சென்னை மற்றும் சேலம் இடையிலான போக்குவரத்து மிகச் சிறப்பாக மாறுவதுடன், ஆன்மிக தலமாக விளங்கும் திருவண்ணாமலை நகரமும் மிகச் சிறப்பான போக்குவரத்து வசதியை பெறும்.




  • மேலும், இது Controlled access highway என்ற நவீன கட்டமைப்பு வசதிகளுடன் 8 வழித்தட சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. இதன்படி, வாகனங்கள் இந்த சாலையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், உள் நுழைவதற்கும் ஏதுவான கட்டமைப்புகளை பெற்றிருக்கும்.

  • அதேபோன்று, நேராக செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமலும், பாதுகாப்பாகவும் கடந்து செல்ல முடியும். இந்த சாலையில் சிக்னல்கள், சாலை சந்திப்புகள் இல்லாத வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. இதனால், மிக சுலபமாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால், பயண நேரம் பாதியாக குறையும்.

  • இதுபோன்ற மிக நவீன சாலை கட்டமைப்பு திட்டத்தை முதல்முறையாக தமிழக அரசு செய்ய இருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே இது இரண்டாவது பசுமை வழித்தட நெடுஞ்சாலையாகவும் அமைய இருக்கிறது.





 சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? 

ப்ளஸ்:

1. சேலம் டு சென்னைக்கு தற்போது 5 1/2 முதல் 6 மணி நேரம் ஆகிறது.  ஆனால் 8 வழி பசுமைச் சாலை அமைந்தால் 3 மணி நேரத்தில் சென்னைக்கு சென்று விடலாம். இதனால் சுமார் 2 1/2 நேரம் மிச்சமாகிறது.

2. எரிபொருள் செலவு குறைகிறது. வருடத்துக்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மிச்சம் ஆகும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

3. இந்த 8 வழி பசுமைச் சாலையில் தனியார் கார்களும், சொகுசுப் பேருந்துகள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற மாயை உள்ளது. அது தவறு. வெகுஜன மக்களும் பயணிக்கும் வகையில் பேருந்துகள் விடப்பட இருப்பதால் இச்சாலை அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

4. வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்துக்கு இந்த 8 வழிச் சாலை அவசியமானது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, விரைவாக நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியும்.

5. பெருமளவு விபத்துகள் குறைக்கப்படும்.

6. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விரைவில் சென்னை போன்ற பெரு நகரத்துக்குக் கொண்டு செல்லுவதோடு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இதனால் விவசாயிகளின் விலைப் பொருள்களின் மதிப்பு கூடும். விலை அதிகரிக்கும்.

7. இந்தப் புதிய திட்டத்தால் பின் தங்கிய மாவட்டமாக உள்ள  தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளின் நிலத்தின் மதிப்பு கூடுவதோடு சாலை போக்குவரத்து வணிகம் அதிகரிக்கும்.

8. புதிய தொழில் நிறுவனங்கள் வரக்கூடும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
9. தமிழகம் வேளாண்மைத் துறையில் இருந்து தொழில் துறைக்கு முன்னேற்றம் அடையும்.  

10. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.


மைனஸ்:

1. பசுமைச் சாலைத் திட்டத்தால் கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதி மலை, வெடியப்பன்மலை , தீர்த்தமலை என மீள் உருவாக்கம் செய்ய முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.


2. இத்திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல நீர்நிலைகள் அழிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. தற்போது உணவுப் பொருள்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைப் போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும்.  

3. இந்தியாவில் விவசாயம் அழிந்து வரும் நிலையில் இத்திட்டத்தால் நிறைய விவசாய நிலங்கள் அழிக்கப்படும். விவசாயத் தொழிலை நம்பி வாழக்கூடிய விவசாயிகள், விவசாயக் கூலிகள், விவசாயத் தொழிலைச் சார்ந்து வாழக்கூடிய சார்பு நிலை தொழிலாளர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழிலை இழக்கக் கூட நேரிடலாம்.

4. இத்திட்டத்தால் அதிகளவு விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் விளைபொருளின் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி அதிகரிக்கும்.  உணவுப் பஞ்சம் ஏற்படக் கூடும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத மாநிலமாக தமிழகம் மாறும்.




5. கனிம வளங்கள் இல்லாத நிலம் பாலைவனம் என்பதைப் போல கஞ்சமலை, கவுதிமலை, வெடியப்பன் மலையில் உள்ள இரும்புத் தாதுகளும், தருமபுரியில் மாவட்டத்தில் பிளாட்டின பாறைகளும், கல்வராயன் மலை, ஜருகு மலையில் உள்ள கருங்கற்களும் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடியில் உள்ள கனிமங்களும் பாதிக்கும்.

6. பசுமை வழிச் சாலையின் இரு புறமும் சுற்றுச்சுவர் கட்டுவதால் ஒட்டி இருந்த கிராமங்கள் தொடர்புகளே இல்லாமல் பிரிக்கப்படும்.

7. இச்சாலையில் தொடக்கமே 120 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டியிருப்பதால் சாதாரண வாகனங்கள் செல்ல முடியாது. 

8. இச்சாலை 10 ஆயிரம் கோடியில் உருவாக்குவதால் டோல்கேட் சார்ஜ் குறைந்தது கி. மீட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் இருக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் இச்சாலையில் பயணிக்க முடியாது.

9. ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, அரூர் போன்ற பகுதிகளில் 23 கி.மீட்டர் வனப்பகுதியில் செல்லுவதால் வன உயிரினங்களின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதோடு அவற்றின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.


10. இயற்கையைக் காக்க உலக நாடுகள் முன் வரும் நிலையில் இத்திட்டத்தால் பழைமை வாய்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகிறது. அதற்குப் பதிலாக 4 மடங்கு மரங்கள் நட்டாலும் அது சமநிலை செய்யக் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மரங்கள் அழிக்கப்பட்டால் கார்பன் டை ஆக்ஸைட் அதிகரிக்கும், ஆக்ஸிஜன் குறையும். கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்தால் உலக வெப்ப மயமாதல் அதிகரிக்கும்.



அவசியமா???

மக்களின் கேள்வி என்னவென்றால் விவசாயம் வேகமாக அழிந்துவரும் இவ்வேளையில் பசுமையை அழித்து உருவாக்கும் இந்த பசுமை நெடுஞ்சாலை தேவைதானா? என்பதுதான்.....

LIKE US ON FACEBOOK CLICK HERE...

SHOW FULL CODE Frequently asked questions 1Links 2Entries 3Exits 4Pop Ads 5Capping capability 6Timeout 7Trigger type YOUR CUSTOM SCRIPT

Tuesday, June 12, 2018

கொல்லிமலை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்

கொல்லிமலை[ KOLLI HILLS ]

Jump to search
கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில்அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும்.

 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400மீ) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக அக்டோபர், 2012 அன்று தொடங்கப்பட்டது[1]. நாமக்கல் வட்டத்தில் இருந்த ஊராட்சிகள் வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு ஆகியவையும் இராசிபுரம் வட்டத்தின் ஊராட்சிகள் ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு ஆகியவை இவ்வட்டத்துடன் இணைக்கப்பட்டன. 

  





    பெயர்க் காரணம்

    உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் 'மூலிகைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது.

    வரலாற்றுக் குறிப்புகள்

    பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம்மணிமேகலைபுறநானூறுஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
    இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

    சங்ககாலத்தில் கொல்லிமலை

    அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.

    கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்

    பெருஞ்சேரல் இரும்பொறை
    பொறையன்
    சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
    வானவன்
    அதியமான்
    ஓரி

    கொல்லிப்பாவை

    கொல்லிமலையில் வீற்றிருக்கும் திராவிடர்களின் தெய்வம் இந்த பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாக இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது.குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். அவையாவன மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா போன்றவைகள் ஆகும்.

    சுற்றுலாத் தலங்கள்

    கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.ஆகாய கங்கை அருவி


    கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.கொல்லிப் பாவைக் கோவில்

    அறப்பளீஸ்வரர் கோவில்

    சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

    அறப்பளீஸ்வரர் கோவில்
    12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.

    முருகன் கோவில்

    அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.

    படகு சவாரி

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்

    வியூ பாயிண்ட்

    இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்


    வல்வில் ஓரி பண்டிகை

    வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    போக்குவரத்து


    நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ.
     இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.
    2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


    LIKE OUR FACEBOOK PAGE FOR MORE INFO CLICK HERE...
    SHARE THIS TO YOUR FRIENDS.... 

    WELCOME TO LAND OF TAMIL

    WELCOME TO LAND OF TAMIL
    UNITE AND SUPPORT

    LIKE US ON FACEBOOK CLICK HERE...

    Election survey - 2021

    Results are ready

    Popular posts